Type Here to Get Search Results !

வரலாறு | Part - 31 | 155 Questions

History in Tamil Part: 31

முக்கிய உடன்படிக்கைகள்

1. பாசின் உடன்படிக்கை – 1802

2. சால்பை உடன்படிக்கை – 1782

3. Deogaon  உடன்படிக்கை – 1807

4. புரந்தர் உடன்படிக்கை – 1776

5. ராஜ்காட் உடன்படிக்கை – 1806

6. ஸ்ரீ ரங்கபட்டடினம் உடன்படிக்கை – 1792

7. மங்களுர் உடன்படிக்கை – 1784

8. லாகூர் உடன்படிக்கை – 1846

9. அலகாபாத் உடன்படிக்கை – 1764

10. அமிர்தசரஸ் உடன்படிக்கை – 1809

11. Treaty of Tripartitie – 1838

12. Treaty of Bhirowal - 1846

13. Treaty of  Tehran – 1809

14. Treaty of  Unkiar Skelessi – 1833

15. Treaty of  London - 1840

இடம் வாழ்ந்த மராத்தியர்கள்

1. பூனாபெஷாவர்

2. பரோமோகெய்க்வாட்

3. நாக்பூர் - போன்ஸ்லோ

4. இந்தூர் - ஹோல்கர்

 

சுவாமி விவேகானந்தர்

1. இராமகிருஷ்ணா பரமஹம்சரின் முதன்மைச் சீடர் சுவாமி விவேகானந்தர்.

2. விவேகானந்தரின் பிரச்சாரம் விழுமின் எழுமின் உழைமின்.

3. விவேகானந்தரின் சிகாக்கோ பிரச்சாரம் இந்தியா பண்பாட்டை உலகம் உணரச் செய்தது.

 

இளம் வங்காள இயக்கம்:

1. இதனை துவக்கியவர் ஹென்றி விவியன் டிரோசோ என்பவர் ஆவார்.

2. இவ்வியக்கம் கல்கத்தாவில் துவக்கப்பட்டது.

3. இவ்வியக்கம் பத்திரிக்கை சுதந்திரம், உழவர்களை பாதுகாத்தல் போன்றவற்றில் சீர்திருத்தம் ஏற்படுத்தியது.

 

கந்துகுரி வீரேசலிங்கம்:

பெண் கல்வி, விதவை மணத்திற்காக ஆந்திராவில் 19ம் நூற்றாண்டில் சமூக சீர்திருத்த இயக்கத்தை நடத்தியவர்.

 

காசி மத்திய இந்துக் கல்லூரி

1916இல் மதன் மோகன் மாளவியா மற்றும் அன்னிபெசண்ட் அம்மையார் ஆகியோரின் முயற்சியால் காசி (பனாரஸ்)ல் துவக்கப்பட்டது.

 

சுபாஷ் சந்திரபோஸ்:

1. 1897ல் ஒரிசா மாநிலத்தில் கட்டாக்கில் பிறந்தார்.

2. 1920ல் ICS  தேர்வில் வெற்றி பெற்று அரசாஙக்ப பணியில் சேர்ந்தார்.

3. பின் சி. ஆர். தாசின் வேண்டுகோளை ஏற்று பதவியினைத் துறந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார்.

4. சுயராஜ் கட்சியின் நாளேடான  Forward என்பதன் ஆசிரியராக பணியாற்றினார்.

5. 1934ல் காங்கிரஸ் சோஷலிஸ்ட் என்ற அமைப்பை துவக்கினார். இதில் ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஆச்சார்ய நரேந்திர தேவ் ஆகியோர் இருந்தனர்.

6. 1939ல் இரண்டாவது முறையாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பின் பதவி விலகினார்.

7. 1939ல் பார்வர்டு பிளாக் என்ற அமைப்பை துவக்கினார்.

8. 1940ல் காங்கிரசை விட்டு வெளியேறினார்.

9. 1940ல் Hollwell என்ற சின்னத்தை இடிக்க முயன்றதாக கைது செய்யப்பட்டார். 1941ல் வீட்டு காவலில் வைக்கப்பட்ட போது மாறு வேடத்தில் தப்பி ஜெர்மன் சென்றார்.

10. 1942ல் ஹிட்லரை சந்தித்து பேசினார். இந்திய போர் கைதிகளை அவர் ஹிட்லரிடம் பெற்றார். பின் Azad Hind Fauj என்ற அமைப்பை துவக்கினார்.

11. அவரின் முக்கிய பேச்சுகள்

1. Dilli Chalo

2. You give me blood, I promise your freedom

நாதுராம் கோட்சே:

30 சனவரி 1948ல் காந்தியடிகளை சுட்டுக் கொன்றவர்

 

சீகன் பால்கு

ஜெர்மனி நாட்டைச் சார்ந்த இவர் 9.7.1706 ஆம் ஆண்டு தரங்கம்பாடிக்கு வந்தார். தமிழில் முதல் அச்சிடப்பட்ட பிரதிகள் தயாரித்தார்.

 

அன்னி பெசண்ட்

1. இந்து மதம் இல்லை என்றால் இந்தியா இருக்காது என்று கூறியவர்.

2. இந்திய தேசியக் காங்கிரசின் (1917 கல்கத்தா மாநாடு) முதல் பெண் தலைவர்.

3. காமன் வீல் என்ற பத்திரிக்கையை துவக்கியவர்

4. இவருக்கு துணை நின்றவர்கள் - அருண்டேல் மற்றும் வாடியா

5. இவர் அய்ரிஷ் நாட்டைச் சேர்ந்தவர்.

6. இவர் இந்தியாவின்டாம் டாம்” என தம்மை அழைத்துக் கொண்டார்.

7. 1916 செப்டம்பர் 16ல் சென்னையில் ஹோம் ரூல் இயக்கம் துவக்கினார்.

8. இவர் நியு இந்தியா என்ற நாளிதழை 14-7-1915ல் துவக்கினார்.

9. இவர் திராவிட கலாச்சாரத்தை எதிர்த்தமையால் செல்வாக்கினை இழந்தார்.

10. சென்னையில் பிரம்மஞான சபை 1883ல் உருவாக்கினார்.

11. சாரண இயக்கத்தை இந்தியாவில் கொண்டு வந்தார்.

Home Rule Movement

12. முதன் முதலில் துவக்கியவர் - திலகர் உடன் துணை நின்றவர்கள் - கேல்கர் மற்றும் பாப்ஸ்டியா

13. திலகர் - மகாராஷ்டிரம் மற்றும் மத்திய மாநில பகுதி

14. அன்னி பெசண்ட் - தமிழ்நாடு, கேரளா, உத்திரப்பிதேசம்

15. உச்சக் கட்டம் அடைந்த காலம் - 1917

16. மறையக் காரணம்: மாண்டெகு செம்ஸ்போர்டு திட்டம்

 

ஆரிய சமாஜம்

1. சுவாமி தயானந்த சரஸ்வதி என்பவர் மும்பையில் 1875ல் ஆரி சமாஜனத்தை துவக்கினார். வேதகாலத்துக்கு திரும்புங்கள் என அவர் குறிப்பிபட்டார்

2. வேதங்களுக்கு பிறகு சமுதாயத்தில் ஏற்பட்ட பழக்கங்களை ஒழித்து வேதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு சமுதாயத்தை திருத்தி அமைக்க பாடுபட்டார்.

3. இவர் புராணங்களை ஏற்கவில்லை. மேலும் உருவ வழிபாட்டை எதிர்த்தார். கடவுளின் அவதாரங்களை மறுத்தார்.

4. “சுத்தியார்த்த பிரகாஷ்” என்ற நூலை எழுதினார்.

5. இந்துக்கள் அல்லாதவர்களை இந்து மதத்தில் சேர்க்கசுத்திஇயக்கத்தை ஆரம்பித்தார்.

6. ஒரே கடவுள் நம்பிக்கையை ஆதரித்தார்.

7. சாதி கட்டுப்பாடு, இளம் பருவ திருமணம், கடற்பிரயாணத்தை தடுத்தல், சடங்குகள், விலங்குகளை பலியிடுதல், சொர்க்கம் போன்றவற்றை எதிர்த்தார்.

8. பெண் கல்வி, விதவை திருமணத்தை ஆதரித்தார்.

9. இவருக்குப்பின் லாலா லஜபதிராய், பண்டிட் குருதத்தர், லால லஜபதிராய், சுவாமி சிரத்தானந்தர் போன்ற முக்கிய சீடர்கள் அவருடைய பணிகளைத் தொடர்ந்து நடத்தினார்கள்.

10. ஆங்கில கல்வியின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டது.

11. லாலா ஹன்ஸ்ராஜ் தயானந்தர் ஆங்கில வேதக் கல்லூரியை லாகூரில் நிறுவினார்.

 

பிரம்ம சமாஜம்

1. 1828ல் இராஜாராம் மோகன்ராய் என்பவரால் வங்காளத்தில் உருவாக்கப்பட்ட ஆதிக்க நிறுவனமே பிரம்மசபை என்று வழங்கப்பட்டது. இது உருவ வழிபாட்டை நீக்கியது.

2. கடவுளின் ஒருமைப்பாட்டின் நம்பிக்கை கொண்டிருந்தது.

3. இராஜாராம் மோகன்ராய் இறந்தபின் தேவேந்திரநாத் தாகூர் இதற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தினார்.

4. மகாநிர்வாண தந்திரம் என்ற ஆரம்ப சடங்கு புகுத்தப்பட்டது.

5. தத்துவபோதினி பத்திரிக்கா என்னும் பத்திரிக்கை தேவேந்திரநாத் துவக்கினார்.

பிரம்ம சமாஜம் சட்டபூர்வமான வழிகளை பின்பற்றிய கீழ்க்கண்ட சமுதாய சீர்திருத்தத்தை உருவாக்கப் பாடுபட்டது

6. பர்தா முறை ஒழித்தல்

7. விதவை மறுமணம் ஆதரித்தல்

8. பலதார மணம் ஒழித்தல்

9. இளம் பருவ மணம் எதிர்த்தல்

10. உயர்தர மேலை நாட்டுக்கல்வி அளித்தல்

11. சதி என்கின்ற உடன்கட்டை நீக்குதல்

12. தீண்டாமை, மது அருந்ததுல் எதிர்த்தல்

13. ஒரே கடவுள் கோட்பாடு

14. உருவ வழிபாடு நீக்குதல்

15. சாதியை இழக்காமல் கடல் கடந்த அயல்நாடுகளுக்கு பயணம் செய்தலை ஆதரித்தல்.

16. பெண் கல்வி ஆதரித்தல்

17. பெண் விடுதலை ஆதரித்தல்

18. கலப்பு திருமணம் ஆதரித்தல்.

19. 1857ல் சேவ சந்திர சென் என்பவர் சேர்ந்தார். பிறகு இவர் இந்தியாவின் பிரம்ம சமாஜம் என்ற அமைப்பை துவக்கினார்.

20. தேவேந்திரநாத் தலைமையில் இருந்த பிரம்ம சமாஜம்  ஆதி பிரம்ம சமாஜம்” என்று அழைக்கப்பட்டது

பிரார்த்தனை சமாஜம்

1. இதை 1867ல் டாக்டர் ஆத்மராம் பாண்டுரங் என்பவர் மும்பையில் துவக்கினார்.

2. பிரார்த்தனை சமாஜம் மாகராஸ்டிரத்தில் நன்றாக வளர்ந்தது.

3. 1870ல் மகாதேவ கோவிந்த ரானடே, பண்டார்கர் ஆகியோர் இதில் சேர்ந்தனர்.

4. தக்காண கல்வி சங்கம் துவங்கப்பட்டது.

5. கலப்பு திருமணம், விதவைகள் மறுமணம் ஆதரிக்கப்பட்டது. குழந்தைகள் புகலிடம், அனாதை நிலையம், இரவுப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டது.

இராமகிருஷ்ண மிஷன்:

1. இது 1897ல் துவக்பப்பட்டது. நரேந்திரநாத் தத்தர் என்ற இயற்பெயருடைய சுவாமி விவேகானந்தர் என்பவரால் துவங்கப்பட்டது.

2. சுவாமி விவேகானந்தர்,  சிக்காகோ நகரில் நடந்த சமயங்களின் பாராளுமன்றத்தில் 1893-ல் கலந்து கொண்டார்

3. இவரின் குறிக்கோள்: எல்லாச் சயமங்களிலும் இருக்கும் உண்மையை நம்புவதுதான். மாறுபட்ட எல்லாச் சமயங்களின் கொள்கைளும் ஒரே குறிக்கோளை அடைவத்றகான பல வழிகளே என்பது ஆகும்.

4. ஏழைகளுக்காக இரக்கப்படுபவரை மகாத்மா என்றும் பிறரை துராத்மா என்றும் கூறினார்.

5. சகிப்புத்தன்மை, சமத்துவம், மனித நேயத்துடன் மதவேற்றுமையின்றி மக்களிடையே ஒற்றுமை வேண்டும் என்றும், பிறருக்கு உதவி செய்வதே மனிதத் தன்மையம் கடவுளுக்கு செய்யும் சிறந்த சேவையாகும் என்றார். மேலும் ஒவ்வொரு மனிதனும் கடவுளின் ஒரு பாகம் என்றும்

6. தொண்டு செய்வதன் மூலம் கடவுளுக்கு தொண்டு செய்தவராவர் என்றும் கூறினார்.

தியாசபிகல் சங்கம் அல்லது பிரம்மஞான சபை:

1. இச்சபை  கர்னல் ஆல்காட், பிளவாட்ஸ்கி அம்மையார் ஆகிய ஐரோப்பியர்களால் அமெரிக்காவில் 1875ல் நிறுவப்பட்டது.

2. பின்னர் 1893ல் இதன் தலைமையில் சென்னை அடையாறுக்கு மாற்றப்பட்டது.

3. சென்னையில் இச்சங்கத்திற்கு அன்னிபெசண்ட் அம்மையாரால் வெற்றி கிடைத்தது

4. தியாசபிகல் சங்கம் ஆரம்பித்ததே இந்து மறுமலர்ச்சி இயக்கத்துடன் சேர்ந்து கொண்டது

5. இந்துக்களின் கர்மவினை, மறுபிறவி கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டிருந்தது

6. அன்னிபெசண்ட் அம்மையார் மத்திய இந்துப் பள்ளியை வாராணாசியில் துவக்கினார்.

வேத சமாஜம்

இது சென்னையில் துவங்கப்பட்டது

ஸ்ரீநாராயண குரு:

கேரளாவின் 1903-ல் ஸ்ரீநாராயண குரு தர்மபரிபாலன யோகம் என்ற அமைப்பை நிறுவி மூடநம்பிக்கைகளைக் கண்டித்தார். சாதி, சமய, வேறுபாடுகளில் அவருக்கு நம்பிக்கையில்லை.

மதுரா சிற்பங்கள்

1. வெள்ளை மற்றும் சிவப்பு கற்களால் கட்டப்டப்டது.

2. புத்தரின் முதல் உருவம் வடிவமைக்கப்பட்டது.

காந்தாரக் கலை

1. இந்தோகிரேக்க கலை

2. கனிஷ்கர் காலத்தில் வளர்ச்சி அடைந்தது

ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

1. வங்காளத்தைச் சார்ந்த இவர் விதவைத் திருமணத்தைச் சட்டமாக்குவதற்கு மிகவும் அதிகமாகப்  பாடுபட்டு வெற்றி கண்டவர்.

2. இந்தியாவில் விதவைப் பெண்கள் மறுமணச் சட்டம் 1856ல் நிறைவேற்றப்பட்டது.

லலித் கலா அகாதெமி

1. ஜவஹர்லால் நேரு அவர்களால் இது துவக்கப்பட்டது.

2. இந்தியாவின் செல்வச் செழிப்பினை ஐரோப்பியர் அறியக் காரணமாக இருந்தது மார்க்கோ போலோவின் குறிப்புகள்.

3. கர்நாடகத்தை ஆட்சி புரிந்தவர்கள் நவாப் இவர்களின் தலைநகர் ஆற்காடு, தக்காணத்தை ஈண்டு வந்தவர்கள் நிஜாம்.  தலைநகர் ஹைதராபாத்..

இந்தோசார்சனிக் கலை

1. இந்தோசார்சனிக் கலை அல்லது இந்தோ கோத்திக் கலை எனப்பட்டது. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது

2. சென்னை அருங்காட்சியகம், சென்னையில் உள்ள ரிப்பன் கட்டிடம் என்று அழைக்கப்படும்  மாநகராட்சிக் கட்டிடம், கல்கத்தாவில் உள்ள விக்டோரியா மெமோரியல், மும்பையில் உள்ள விக்டோரியா டெர்மினஸ், இந்தியாவின் நுழைவு வாயில் எனப்படும் கேட் வே ஆப் இந்தியா மற்றும் மைசூர் அரண்மனை ஆகியவை இந்தோசார்சனிக் கலைக்கு எடுத்துக் காட்டாகும்.

3. இந்தியா சுதந்திரம் பெற்றதும் காங்கிரசைக் கலைக்கக் கோரியவர் காந்தியடிகள். இவர் இந்தியா சுதந்திரம் பெற்ற போது டில்லியில் இல்லை

Permanent Settlement: நிலையான நிலவரித் திட்டம்:

முதன் முதலில் 1793ம் ஆண்டு காரன்வாலிஸ் பிரபு காலத்தில் வங்காளம் மற்றும் பீகாரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி ஜமீன்தாருக்கும் அரசுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டது. அரசுக்கும் விவசாயிக்கும் ஜமீன்தாருக்கும் வாயிலாக தொடர்பு ஏற்பட்டது.

ரயத்துவாரி நிலவரித் திட்டம்

முதன் முதலில் 1820ம் ஆண்டு சென்னை கவர்னர் சர் தாமஸ் ரோ என்பவரால் சென்னை மாகாணத்தில் அறிமுகப் படுத்தப்பட்டது. இதன்படி அரசுக்கும் விவசாயிக்கும் தொடர்பு ஏற்பட்டது. பயிரிடுபவர்கள் நேரடியாகவே அரசுக்கு நிலவரி செலுத்தினர்.

சாலர் ஜங் அருங்காட்சியகம்

சாலர் ஜங் அருங்காட்சியகம் மூசி நதிக்கரையின் மேல் (ஹைதராபாத்) அமைந்துள்ளது. ஹைதராபாத் நிஜாமின் முதலமைச்சராக யூசுப் அலி சாலர் ஜங் இவ்வருங்காட்சியத்தை உருவாக்கினார்.

 

தேசியக்கொடி:

1. 1904ம் ஆண்டு விவேகானந்தரின் சீடரான நிவேதிதா என்பவர் சிவப்பு வண்ணத்தில், சதுர வடிவத்தில், மஞ்சள் நிறத்தில், உள்வடிவைக் கொண்ட பேரிடியை உணர்த்தும் வகையில் வஜ்ஜிரத்தையும் வெள்ளைத் தாமரையம் வந்தே மாதரம் என்ற சொல்லையும் உள்ளடக்கியது. இது நிவேதிதா கொடி எனப்பட்டது.

2. வங்கப் பிரிவினையின் போது 7.8.1906 அன்று சந்திர பிரசாத் போஸ் என்பவரால் சிவப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தைக் கொண்ட கொடி ஒன்று உருவாக்கப்பட்டது. இது வங்கக் கொடி எனப்பட்டது.

3. காம அம்மையார் 22.8.1907 அன்று ஜெர்மனியில் பச்சை,  இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு வண்ணங்களை கொடி ஒன்றை அமைத்தார். எட்டுத் தாமரைகள் வந்தே மாதரம் என்ற சொல், பிறை நிலவு, சூரியன் ஆகியவை அக் கொடியில் பொறிக்கப்பட்டது. காமா அம்மையார், வீர சவர்க்கர், சியாம்ஜி கிருஷ்ண வர்மா ஆகியோர் இக்கொடியை ஏற்றனர். முதல் உலகப்போரில் இக்கொடியை பயன்படுத்தியதால் இது பெர்லின் கொடி எனப்பட்டது. காதர் கட்சியில் இக் கொடி இந்தியாவின் கொடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது

4. பால கங்காதர திலகர் மற்றும் அன்னிபெசண்ட் அம்மையார் ஆகியோர் துவக்கிய சுய ஆட்சி கழகத்திற்கு சிவப்பு மற்றும் பச்சை பட்டைகளை கொண்ட கொடி வடிவமைக்கப்பட்டது. இதில் சின்னமும், நட்சத்திரனுடன் கூடிய பிறைநிலவு மற்றும் இந்துக்கள் புனிதமாக கருதும் சப்த ரிஷி மண்டலத்தை கொண்ட 7 நட்சத்திரம் அடங்கிய கொடி உருவாக்கப்பட்டது.

5. ஆந்திராவைச் சார்ந்த பிங்கலி வெங்கய்யா என்பவர் 1916ல் பச்சை மற்றும் சிவப்பு என இரு வண்ணங்களை கொண்ட கொடியினை உருவாக்கினார்

6. இக்கொடியில் சக்கரத்தை அமைக்குமாறு காந்தியடிகள் கூறினார். பிறகு திருப்தியடையாத காந்தியடிகள் அனைத்து இந்திய மதங்கள் உள்ளடக்கியவாறு கொடி அமைய வேண்டும் என்று கூறியதால் வெள்ளை, சிவப்பு, பச்சை வண்ணங்களை உள்ளடக்கிய கொடி உருவாக்கப்பட்டது. இதில் சக்கரம் அனைத்து வண்ணங்களிலும் இடம் பெற்றது. இக்கொடி அயர்லாந்து சுதந்திர போராட்ட கொடிக்கு சமமாக கருதப்பட்டது. அகத்தில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் இக்கொடி ஏற்றப்பட்டது.

7. 1931ல் கராச்சியில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் பிங்கலி வெங்கய்யா வடிவமைத்த காவி, வெள்ளை, பச்சை வர்ணங்களுடன் சக்கரத்தைக் கொண்ட மூவர்ணக் கொடியை ஏற்றது.

8. 1947ல் இராசேந்திர பிரசாத் அவர்களைத் தலைவராக கொண்ட குழு நீண்ட விவாதத்திற்கு எந்தவிதமான மதச் சாயலும் கொடியில் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் சக்கரத்திற்கு பதிலாக சாரநாத்தில் உள்ள சாஞ்சி ஸ்தூபியில் உள்ள தர்ம சக்கரத்தை கொடியில் பொறிக்கலாம் என தெரிவித்தது. இக்கொடி 22.7.1947 அன்று ஏற்கப்பட்டது.

இந்திய பொது உடைமைக் கட்சி:

1. இரஷ்யாவில் தாஸ்கண்டில் 17.10.1920 தோன்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் விளைவாக இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.) 26.12.1925ல் தோன்றியது. இதன் நிறுவன உறுப்பினர்கள் எம்.என்.ராய் மற்றும் அவரது மனைவி ஈவாலினா டிரஞ்ச் ராய், அபானி முகர்ஜி மற்றும் அவரது மனைவி ரோசா, அகமது ஹாசன் என்றழைக்கப்பட்ட முகமது அலி, முகமது சபீக் சித்திக் மற்றும் எம்.பி.பி.ட்டி. ஆச்சர்யா ஆகியோர் ஆவார்.

2. தமிழகத்தின் இதன் முக்கியத் தலைவர்கள் சிங்காரவேலு  ஆவார். இக் கட்சியின் தொழிற்சங்க பிரிவான All India Trade Union Congress (AITUC) இந்தியாவின் மிக பழைமையான தொழிற்சங்கம் ஆகும். இது 1920ல் துவங்கப்பட்டது.

3. 1942ல் இக்கட்சி சட்டப்பூர்வமாகியது. கேரளாவில் இக்கட்சி ஆட்சியை பிடித்தது. முதல் அமைச்சராக .எம்.எஸ் நம்பூதிரிபாட் பதவி ஏற்றார்.

4. 1957ல் இரஷ்யாவில் நடந்த உலக கம்யூனிஸ்ட் மாநாட்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சி கேரளாவில் ஆட்சி பிடித்ததை கண்டன விமர்சனத்திற்கு உள்ளாக்கியது.

5. 1962ல் இந்தியசீன போர் நடைபெற்ற போது,  ஒரு பிரிவினர் இந்தியாவை ஆதரித்தனர். சிலர் இது ஒரு முதலாளித்துவத்திற்கும்,  பொதுவுடைமைக்கும் நடைபெறுகின்ற போர் எனத் தெரிவித்து சீன அரசாங்கத்தை ஆதரித்தனர். எனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மூன்று பிரிவுகள் ஏற்பட்டது

6. இந்திய ஆதரவாளர்கள்: எஸ். . டாங்கே, . கே. கோபாலன் மற்றும் .எம்.எஸ். நம்பூதிரிபட்.

7. சீன ஆதரவாளர்கள்: பி.டி. ரணதீவே, சுந்தரய்யா, பி. சி. ஜோஷி, பசவபுன்னைய்யா, ஜோதி பாசு மற்றும் ஹர்கிஷன் சுர்ஜித்

8. நடு நிலைமை: அஜய் கோஷ்

9. இந்திய சீன போரின் போது சீன ஆதரவாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். எனவே அவர்கள் ஒன்று கூடி 1964ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் என்று தனியே கட்சியைத் துவக்கினார். இதன் தொழிற்சங்க பிரிவாக Centre of Indian Trade Unions (CITU)  1970 துவக்கப்பட்டது.

பாரதீய ஜனதா கட்சி:

இக் கட்சி பாரதீய ஜன சங்கம் என்ற பெயரில் 1951ல் சியாம் பிரசாத் முகர்ஜி என்பவரால் துவங்கப்பட்டது. பின்னர் வாஜ்பேயி மற்றும் அத்வானி ஆகியோர் டிசம்பர் 1980 பாரதீய ஜனதா கட்சி என பெயர் மாற்றத்துடன் துவங்கினர். மே மாதம் 1996ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இக் கட்சி ஆட்சியை பிடித்தது. வாஜ்பேய் பிரதம அமைச்சராக பதவி ஏற்றார்.

 

இந்தியன் பீனல் கோடு:

முதல் சட்ட கமிஷன் மெக்காலே பிரபு தலைமையில் அமைந்தது. அவர் இந்தியன் பீனல் கோடு உருவாக்கினார். 1860ல் இது சட்டமாக்கப்பட்டது

இந்திரா காந்தி:

1. முதல் பிரதமர்.

2. ஜவஹர்லால் மகள்.

3. இந்தியாவின் பிரதம அமைச்சராக இருந்தவர்.

4. 1861 - இந்தியா கவுன்சில் சட்டம்.

5. இலாக்கா வாரியாக நிர்வாகம் பிரிக்கப்பட்டது.

6. சட்டம் இயற்ற ஏதுவாக கவர்னர் ஜெனரல் சபை விரிவாக்கப்பட்டது.

7. சென்னை, மும்பை மற்றும் வங்காளத்தில் சட்ட மேலவை உருவாக்கப்பட்டது.

8. கானிங் பிரபு காலத்தில் இச்சட்டம் இயற்றப்பட்டது.

9. 1892ல் இந்திய கவுன்சில் சட்டம்.

10. மத்திய சபையின் உறுப்பினர்கள் 10ல் இருந்து 16க்கு உயர்த்தப்பட்டன.

11. சென்னை, வங்காளம், பம்பாய் சட்ட மேலவை உறுப்பினர்கள் 15ல் இருந்து உயர்த்தப்பட்டனர்.

12. உறுப்பினர்கள் வரவு செலவு குறித்து பேச உரிமை வழங்கப்பட்டது.

13. பொது நலன் குறித்து வினாக்கள் எழுப்ப அனுமதி வழங்கப்பட்டது.

14. மறைமுக உறுப்பினர் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.

முக்கிய விவசாய சட்டங்கள்:

1. Deccan Agricultural Relief Act 1879

2. Punjab Land Alienation Act 1900

3. Central Provinces Land Alienation Act 1904

4. North West Provinces Land Alienation Act 1916